ஏப்.16,2013. “புதிய தலைமுறையோடு இணைந்து வேறுபட்ட உருவங்களை படைத்தல் : அமைதிக் கலாச்சாரத்துக்கு
ஊடகம்” என்ற தலைப்பில் இவ்வாண்டின் Signis அனைத்துலக மாநாடு நடைபெறவிருக்கிறது. வருகிற
அக்டோபர் 20 முதல் 23 வரை லெபனன் நாட்டின் பெய்ரூட்டில் நடைபெறவிருக்கும் இம்மாநாடு குறித்து
வத்திக்கான் வானொலியில் நிருபர் கூட்டத்தில் பேசிய Signis தலைவர் அகுஸ்தின் லூர்துசாமி,
புதிய தலைமுறைகளுக்கும் ஊடகத்துக்கும் இடையேயுள்ள தொடர்பு குறித்து விளக்கினார். ஊடகத்துறையில்
ஏற்கனவே அனுபவம் பெற்றவர்களுக்கும், புதிய தலைமுறைகளுக்கும் இடையே உண்மையான ஒத்துழைப்பு
ஏற்படுவதன் வழியாக நிறையக் காரியங்களைச் சாதிக்க முடியும் என்று விளக்கினார் லூர்துசாமி.