தீமையினால் ஆட்கொள்ளாதிருக்க பாஸ்டன் மக்களுக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அழைப்பு
ஏப்.16,2013. அமெரிக்க ஐக்கிய நாட்டு பாஸ்டன் நகரில் இத்திங்களன்று இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில்
காயமடைந்த மக்களுக்குத் தனது ஆறுதலையும் செபத்தையும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பாஸ்டன் பேராயர் கர்தினால் Seán O'Malleyக்குத் திருத்தந்தையின் பெயரில் திருப்பீடச்
செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே அனுப்பியுள்ள தந்தியில், அவ்வன்முறையில் இறந்தவர்கள்
இறைவனின் அமைதியை அனுபவிப்பதற்கானத் திருத்தந்தையின் செபமும் தெரிவிக்கப்பட்டுள்ளது இந்நேரத்தில்
பாஸ்டன் மக்கள் அனைவரும் தீமையினால் ஆட்கொள்ளப்படாதவாறு இருக்கவும், தீமையை நன்மையினால்
மேற்கொள்ளவும் வேண்டுமெனக் கேட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ், பாஸ்டன் மக்கள், வருகிற
தலைமுறைகளுக்கு இன்னும் மேலான நீதியும், சுதந்திரமும், பாதுகாப்பும் கொண்ட சமுதாயத்தை
ஒன்றிணைந்து கட்டியெழுப்பவும் உறுதி எடுக்குமாறும் அத்தந்திச் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.