2013-04-16 16:10:01

எருசலேம் துணை ஆயர் : திருத்தந்தை பிரான்சிஸ் புனிதபூமி கிறிஸ்தவர்கள்மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளார்


ஏப்.16,2013. திருத்தந்தை பிரான்சிஸ் தனது மக்களை அன்புகூரும் ஒரு மனிதர் மற்றும் தனது மந்தையோடு வாழ விரும்பும் ஒரு மேய்ப்பர் என்று எருசலேம் துணை ஆயர் வில்லியம் ஷோமாலி கூறினார்.
எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும் தலைவரும், அம்முதுபெரும் தலைவர் இல்லப் பிரதிநிதிகளும் தானும் இத்திங்கள் காலை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்த பின்னர் அவரோடு சேர்ந்து மதிய உணவு அருந்தியது மிகுந்த மகிழ்ச்சியை அளித்ததாகக் கூறிய ஆயர் ஷோமாலி, இச்சந்திப்பில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தாழ்ச்சி நிறைந்த பண்பை உணர முடிந்தது என்று கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் புனிதபூமி கிறிஸ்தவர்கள்மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளார் என்பதை, தான் எருசலேம் திரும்பிய பின் மக்களிடம் சொல்லவிருப்பதாகவும் ஆயர் ஷோமாலி ஆசியச் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

ஆதாரம் : AsiaNews







All the contents on this site are copyrighted ©.