2013-04-10 16:49:50

திருத்தந்தை பிரான்சிஸ் வழங்கிய Twitter செய்திகள்


ஏப்.10,2013. கட்டளைகளைக் கடைபிடிப்பதால் மட்டும் ஒருவர் கிறிஸ்தவர் என்ற நிலையை அடையமுடியாது, மாறாக, கிறிஸ்து நமது வாழ்வை முற்றிலும் ஏற்று, அதனை மாற்றியமைக்கும்போது மட்டுமே நாம் அந்நிலையை அடைகிறோம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இப்புதனன்று தான் வழங்கிய Twitter செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் ஒரு செய்தியை Twitter வழியே வெளியிட்டுள்ளார். இச்செய்தியில், "இறைவன் நம்மீது அன்பு கொண்டுள்ளார் என்பதை உணர்ந்து, அவருடைய குழந்தைகளாக நாம் நடந்துகொண்டால், நம் வாழ்வு அமைதியாலும், மகிழ்வாலும் நிறைந்து, முற்றிலும் புதியதோர் வாழ்வாக மாறும்" என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.