கர்தினால் Bras de Avizதைவான் நாட்டில் பத்து நாள் மேய்ப்புப்பணி
பயணம்
ஏப்.10,2013. அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வைத் தேர்ந்தோர், மற்றும் திருத்தூதுப் பணிகளில்
ஈடுபட்டுள்ள அமைப்பினரை ஒருங்கிணைக்கும் திருப்பீடப் பேராயத்தின் தலைவர் கர்தினால் Bras
de Aviz அவர்கள், தைவான் நாட்டில் பத்து நாள் மேய்ப்புப்பணி பயணத்தை மேற்கொண்டுள்ளார். இத்திங்களன்று
தைவான் நாட்டைச் சென்றடைந்த கர்தினால் Aviz அவர்கள், ஏப்ரல் 18ம் தேதி முடிய அந்நாட்டில்
உள்ள பல்வேறு துறவு இல்லங்களையும், திருத்தூதுப்பணி அமைப்பு நிறுவனங்களையும் பார்வையிடுவார். தைவான்
நாட்டில் பணியாற்றும் அனைத்துத் துறவுச் சபைகளின் உயர் தலைவர்கள் மேற்கொண்டுள்ள ஒரு கருத்தரங்கில்
கலந்து கொள்வதற்கென அந்நாட்டிற்குச் சென்றுள்ள கர்தினால் Aviz, Focolare இயக்கத்தை உருவாக்கிய
Chiara Lubich அவர்களின் ஐந்தாம் ஆண்டு மரண நினைவையொட்டி, Fu Jen கத்தோலிக்கப் பல்கலைக்கழகம்,
ஏப்ரல் 12ம் தேதி ஏற்பாடு செய்துள்ள நிகழ்வில், கலந்து கொள்வார். கர்தினால் Aviz
அவர்கள் மேற்கொண்டுள்ள இப்பயணத்தின் ஓர் உச்ச நிகழ்ச்சியாக, ஏப்ரல் 14, ஞாயிறன்று திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்களுக்காக ஒப்புக்கொடுக்கப்படும் நன்றித் திருப்பலி அமையும் என்று வத்திக்கான்
நாளிதழ் L’Osservatore Romano குறிப்பிட்டுள்ளது.