கர்தினால் கிரேசியஸ் : ஆசியத் திருஅவை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் பயணம் செய்கிறது
ஏப்.05,2013. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தேர்தல் உயிர்ப்பின் ஓர் அனுபவமாக இருந்தது
என்று, இந்திய ஆயர் பேரவைத் தலைவரான மும்பை பேராயர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ் கூறினார். முன்னாள்
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் பதவி விலகியதைத் தொடர்ந்து திருஅவையில் உணரப்பட்ட
பாதுகாப்பின்மைச் சூழலில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தேர்தல் உயிர்ப்புக்குச்
சாட்சி வழங்குவதாக அமைந்துள்ளது என்று கூறினார் கர்தினால் கிரேசியஸ். உரோம் மறைமாவட்டத்தின்
புதிய ஆயர் குறித்தும், அவர் இந்திய மற்றும் உலகளாவியத் திருஅவைமீது ஏற்படுத்தியுள்ள
தாக்கம் குறித்தும் ஆசியச் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த கர்தினால் கிரேசியஸ்,
ஆசியத் திருஅவை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் சேர்ந்து பயணம் செய்கிறது என்று தெரிவித்துள்ளார். நாம்
நற்செய்தியோடு ஒன்றிணைந்து வாழ்ந்தால், உயிர்த்த கிறிஸ்து என்றும் நம்மோடு இருப்பதை உணருவோம்
என்றும் கூறிய கர்தினால் கிரேசியஸ், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தேர்தல் உண்மையிலேயே
உயிர்ப்பின் அனுபவம் என்று கூறினார்.