ஏப்.04,2013. முனைவர் எக்ஸ்.டி.செல்வராஜ் அவர்கள், தூத்துக்குடி மறைமாவட்டத்தைச் சார்ந்த
ஒரு சமூக ஆர்வலர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை மூடும்படி சென்னை உயர்
நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை இந்திய உச்ச நீதிமன்றம் இரத்து செய்துள்ளது. அதே நேரம்,
சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்க, 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்துள்ளது. இதையொட்டி
ஸ்டெர்லைட் ஆலையின் உண்மை நிலவரம் குறித்து அறிவதற்காக முனைவர் எக்ஸ்.டி.செல்வராஜ் அவர்களைத்
தொலைபேசியில் அழைத்தோம்.