திருத்தந்தைக்கு லாஸ் ஆஞ்சலஸ் சிறையிலுள்ள இளம் கைதிகளின் நன்றிக்கடிதம்
ஏப்.02,2013. திருத்தந்தை பிரான்சிஸ் புனித வியாழன் மாலை திருப்பலியில் இளம் கைதிகளின்
பாதங்களைக் கழுவித் துடைத்த செயல் தங்கள் வாழ்வில் நம்பிக்கை பிறக்க உதவியுள்ளது என தங்கள்
நன்றியை வெளியிட்டு திருத்தந்தைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர் அமெரிக்க ஐக்கிய நாட்டின்
லாஸ் ஆஞ்சலஸ் சிறையிலுள்ள இளம் கைதிகள். குற்றங்கள் புரிந்த எங்களை சமூகம் கைவிட்டுள்ள
நிலையில் நீவிர் எம்மை கைவிடவில்லை என்பதை இந்த பாதம் கழுவும் நிகழ்ச்சி மூலம் வெளிப்படுத்தியுள்ளீர்
என தங்கள் கடிதத்தில் தெரிவித்துள்ளனர் இந்த இளம் கைதிகள். இத்தண்டனைக்காலத்தை முடித்து
வெளிவரும்போது திருத்தந்தையைப் போன்றே தாங்களும் இளையோரின் நல்வாழ்வுக்கென தங்களை அர்ப்பணிக்கும்
வரத்திற்காக செபிக்குமாறு திருத்தந்தைக்கு அக்கடிதத்தில் இவ்விளைஞர்கள் வேண்டுகோள் விடுத்துடுள்ளனர். எளிமையையும்
அமைதியையும் விரும்பிய புனித பிரான்சிஸ் அசிசியின் பெயரை புதிய திருத்தந்தை தேர்ந்துகொண்டதற்கு
தங்கள் பாராட்டையும் நன்றியையும் வெளியிட்டுள்ளனர் லாஸ் ஆஞ்சலஸ் சிறையின் இளம் கைதிகள்.