அர்ஜென்டினா மக்கள் ஒன்றிணைந்து வருவதற்கு நல்லதொரு தருணம் - ஆயர் பேரவைத் தலைவர்
மார்ச்,27,2013. திருத்தந்தை பிரான்சிஸ் திருஅவையின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள நேரம்,
அர்ஜென்டினா மக்கள் பகைமை உணர்வுகளைக் களைந்து ஒன்றிணைந்து வருவதற்கு நல்லதொரு தருணம்
என்று அர்ஜென்டினா ஆயர் பேரவைத் தலைவர் கூறினார். நம்மிடையே கருத்து வேறுபாடுகள் பல
இருந்தாலும், திருத்தந்தையின் வழிகாட்டுதலுடன் வேற்றுமையில் நாம் ஒற்றுமை காண முடியும்
என்று அர்ஜென்டினா ஆயர் பேரவையின் தலைவர் பேராயர் José Maria Arancedo, Fides செய்தி
நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார். திருத்தந்தையை வத்திக்கானில்
சந்தித்த அர்ஜென்டினா அரசுத் தலைவர் Cristina Fernandez அவர்கள், அச்சந்திப்பின் வழியாக
புதிய எண்ணங்கள் எழுந்தன என்று தன்னிடம் பகிர்ந்துகொண்டதாக பேராயர் Arancedo தன் பேட்டியில்
குறிப்பிட்டார். அர்ஜென்டினா அரசுக்கும் அந்நாட்டுத் திருஅவைக்கும் கருத்து வேறுபாடுகள்
இருந்துள்ளன என்பதும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இக்கருத்து வேறுபாடுகள் உச்சநிலையை
அடைந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.