2013-03-26 15:54:46

இந்தியாவில் மறைப்பணியாற்றிய ஆஸ்திரேலிய அருள்சகோதரி ஒருவரைப் புனிதர் நிலைக்கு உயர்த்துவதற்கு முயற்சி


மார்ச்,26,2013. இந்தியாவில் மறைப்பணியாற்றிய ஆஸ்திரேலிய அருள்சகோதரி ஒருவர், இப்புதனன்று இறைஊழியர் என்று அறிவிக்கப்படுவார் எனக் கூறப்பட்டுள்ளது.
1920ம் ஆண்டில் தனது 33வது வயதில் Gunturல் தனது மறைப்பணியைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அருள்சகோதரி Mary Glowrey அவர்களை, மார்ச் 27, இப்புதனன்று இடம்பெறும் எண்ணெய் மந்திரிப்புத் திருப்பலியில் இறைஊழியர் என்று அறிவிக்கவுள்ளார் ஆயர் Gali Bali.
மெல்பெர்ன் புனித வின்சென்ட் மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவராகிய Mary Glowrey, இந்தியா சென்ற பின்னர், இயேசு,மரி,வளன் சபையில் சேர்ந்தார். ஏழைகள் மற்றும் தீராத நோயாளிகள்மீது மிகுந்த அக்கறை காட்டிய அருள்சகோதரி Mary Glowrey, CHAI என்ற இந்திய கத்தோலிக்க நலவாழ்வு கழகத்தை 1943ம் ஆண்டில் தோற்றுவித்தார்.
இச்சகோதரி 1957ம் ஆண்டு மே மாதம் 5ம் தேதி பெங்களூரில் இறந்தார்.
ஆதாரம் : CA








All the contents on this site are copyrighted ©.