2013-03-25 16:33:58

பேராயர் ஆஸ்கர் ரொமேரோ அவர்கள் மரணமடைந்த 33ம் ஆண்டு நிறைவு


மார்ச்,25,2013. இலண்டன் மாநகரின் Trafalgar சதுக்கத்திற்கு அருகே அமைந்துள்ள புனித மார்ட்டின் ஆலயத்தில், பேராயர் ஆஸ்கர் ரொமேரோ அவர்கள் மரணமடைந்த 33ம் ஆண்டு நிறைவு கடைபிடிக்கப்பட்டது.
1980ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி, El Salvador நாட்டின் தலைநகர் San Salvadorல் பணியாற்றிய பேராயர் ரொமேரோ, திருப்பலி நிகழ்த்திக் கொண்டிருந்த வேளையில் அந்நாட்டு இராணுவ வீரர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த 33ம் ஆண்டு நிறைவு செப வழிபாட்டின்போது பேராயர் ரொமேரோ அவர்கள் புனிதர் நிலைக்கு உயர்த்தப்படும் முயற்சிகள் விரைவில் நடைபெற வேண்டுமென்ற செபங்களும் எழுப்பப்பட்டன என்று ICN கத்தோலிக்கச் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
இலத்தீன் அமெரிக்க நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திருத்தந்தை ஒருவரின் வரவால், அந்நாடுகளில் நம்பிக்கையை வளர்க்கும் ஓர் ஆண்டாக 2013ம் ஆண்டு அமையும் என்று பிரித்தானிய அரசின் El Salvador தூதர் Werner Matias Romero இவ்வழிபாட்டில் கூறினார் என்று ICN செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
ஆதாரம்- ICN








All the contents on this site are copyrighted ©.