2013-03-23 16:00:45

தண்ணீரைச் சமமாகப் பங்கிடுவதில் அதிக ஒத்துழைப்பு தேவை, ஐ.நா. அதிகாரிகள்


மார்ச்,23,2013. தண்ணீரைச் சமமாகப் பயன்படுத்துவது மற்றும் சமமாகப் பங்கிடுவதில் அதிக ஒத்துழைப்பு தேவை என்று, ஐ.நா. அதிகாரிகள் வலியுறுத்தினர்.
அனைத்துலக தண்ணீர் தினத்தின் 20வது ஆண்டு நிறைவையொட்டி இவ்வாறு செய்தி வெளியிட்ட ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன், தண்ணீர் பொதுவான வளம், இதனை மிகுந்த அறிவோடும், அதேநேரம் இதனை அதிகம் வீணாக்காமலும் பயன்படுத்துமாறு கேட்டுள்ளார்.
உலகில் மூன்று பேருக்கு ஒருவர் வீதம் தண்ணீர்ப் பற்றாக்குறையை அனுபவிக்கும் நாடுகளில் வாழ்கின்றனர் எனவும், உலக மக்கள் தொகையில் ஏறக்குறைய பாதிப்பேர் 2030ம் ஆண்டுக்குள் தண்ணீர்ப் பற்றாக்குறையை எதிர்நோக்குவர் எனவும் ஐ.நா. பொதுச்செயலரின் செய்தி கூறுகிறது.
மார்ச் 22 அனைத்துலக தண்ணீர் தினமாகும்.







All the contents on this site are copyrighted ©.