2013-03-22 16:34:10

உயிர்ப்புப் பெருவிழா, விடுமுறையாகக் கடைப்பிடிக்கப்படுமாறு இந்திய ஆயர்கள் வேண்டுகோள்


மார்ச்,22,2013. மார்ச் 31ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழா விடுமுறையாகக் கடைப்பிடிக்கப்படுமாறு இந்திய ஆயர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வரிசெலுத்துவோருக்கு மார்ச் 31ம் தேதியை கடைசி கெடு நாளாக மத்திய அரசு அறிவித்திருப்பதை முன்னிட்டு, அரசுக்கு இவ்வேண்டுகோளை முன்வைத்துள்ளார் இந்திய ஆயர் பேரவையின் பொதுச்செயலர் பேராயர் ஆல்பர்ட் டி சூசா.
கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழா, கிறிஸ்தவ மதத்துக்கு மிக முக்கியமான மற்றும் மைய விழா என்று கூறி, இந்தியாவிலுள்ள கிறிஸ்தவ சமூகத்தைப் புண்படுத்தாத வகையில் அரசு நடந்து கொள்ளுமாறு கேட்டுள்ளார் பேராயர் டி சூசா.







All the contents on this site are copyrighted ©.