2013-03-22 16:35:48

Zimbabwe ஆயர் பேரவை : குடிமக்களுக்கு அமைதியும் சகிப்புத்தன்மையும் தேவை


மார்ச்,22,2013. Zimbabwe நாட்டில் இவ்வாண்டின் பாதியில் நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தல், அந்நாட்டுக்குச் சுதந்திரம் வாங்கிக் கொடுத்த 1980ம் ஆண்டின் தேர்தலைப் போன்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று Zimbabwe கத்தோலிக்க ஆயர் பேரவை கூறியுள்ளது.
Zimbabwe நாடு பொதுத்தேர்தலுக்குத் தயாரித்துவரும் இவ்வேளையில் அறிக்கை வெளியிட்டுள்ள அந்நாட்டு ஆயர் பேரவை, Zimbabweல் அமைதியும், அரசியல் சகிப்புத்தன்மையும் தேவை என்று கூறியுள்ளது.
இதற்கிடையே, Zimbabweவில் இவ்வாண்டில் இடம்பெறவிருக்கும் தேர்தல்கள், சுதந்திரமாகவும் நீதியுடனும் நடைபெற்றால், அந்நாடு இழந்துள்ள பன்னாட்டுச் சமூகத்தின் நன்மதிப்பை மீண்டும் பெறமுடியும் என்று பல அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
Zimbabweவின் அரசியல் அமைப்பின்படி அரசுத்தலைவரின் பதவிக்காலம் ஐந்தாண்டுகள். அப்பதவிக்காலம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படலாம். ஆயினும், 1980ம் ஆண்டிலிருந்து ஆட்சியிலிருக்கும் 89 வயதாகும் முகாபே, மீண்டும் இப்பதவிக்குப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார் என ஊடகங்கள் கூறுகின்றன.







All the contents on this site are copyrighted ©.