2013-03-21 15:10:24

ஆங்கலிக்கன் பேராயர் Welbyயின் முயற்சிகள் பெருமளவு அறுவடையை வழங்கவேண்டும் - முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் வாழ்த்துச் செய்தி


மார்ச்,21,2013. “உங்களுக்காக நாங்கள் வேண்டும் பொழுதெல்லாம் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறோம்” (கொலோ. 1:3) என்ற புனித பவுலடியாரின் வார்த்தைகளுடன் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் Canterbury பேராயர் Justin Welby அவர்களுக்கு வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார்.
2013ம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி 16ம் பெனடிக்ட் அவர்கள் திருத்தந்தையாக இருந்த வேளையிலேயே எழுதப்பட்ட இச்செய்தி இவ்வியாழன்று அனுப்பிவைக்கப்பட்டது.
கத்தோலிக்கர்களுக்கும், ஆங்கலிக்கன் சபையினருக்கும் இடையே அண்மைய ஆண்டுகளில் உருவாகியுள்ள உரையாடல் முயற்சிகளையும், கூட்டு முயற்சிகளையும் தன் செய்தியில் நினைவு கூர்ந்துள்ள முன்னாள் திருத்தந்தை, செறிவுமிகுந்த இந்தப் பாரம்பரியத்தை வளர்க்கும் ஆவலையும் வெளியிட்டுள்ளார்.
மேற்கத்திய கலாச்சாரத்தில் மதங்களுக்கு உள்ள முக்கியத்துவம் குறைந்துவரும் இக்காலக்கட்டத்தில் தன் தலைமைப்பணியை ஏற்கும் பேராயர் Welbyயின் முயற்சிகள் பெருமளவு அறுவடையை வழங்கவேண்டும் என்றும் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வாழ்த்தியுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.