திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களும்
தொலைபேசியில் தொடர்பு
மார்ச்,20,2013. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்செவ்வாய் காலை திருஅவையின் தலைமைப்
பொறுப்பை ஏற்றபின்னர், மாலை 5 மணியளவில் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுடன்
தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். பல நிமிடங்கள் நீடித்த இவ்வுரையாடலில், திருத்தந்தை
பிரான்சிஸ், யோசேப்பு என்ற பெயரைத் தாங்கிய முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்கு
நாம நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். முன்னாள் திருத்தந்தை திருஅவையின் தலைவராக
ஆற்றிய பணிக்கு திருத்தந்தை பிரான்சிஸ் நன்றி தெரிவித்தபோது, திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்களின் பணியேற்பு விழா நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி வழியாக, தான் கூர்ந்து கவனித்ததாகவும்,
அவருடைய பணிவாழ்வில் தான் செபத்துடன் ஒன்றியிருப்பதாகவும் 16ம் பெனடிக்ட் அவர்கள் கூறினார்.