2013-03-16 16:41:42

மார்ச் 17-24 வரையுள்ள திருத்தந்தையின் நிகழ்ச்சித் திட்டங்கள்


மார்ச்,16,2013. மார்ச் 13 இப்புதன் இரவு 7.05 மணிக்குத் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ்,
இஞ்ஞாயிறு காலை 10 மணிக்கு வத்திக்கான் புனித அன்னா ஆலயத்தில் திருப்பலி நிகழ்த்துதல்
பகல் 12 மணிக்கு திருத்தந்தையின் அறையிலிருந்து மூவேளை செப உரை வழங்குதல்
18ம் தேதி திங்களன்று அர்ஜென்டினா அரசுத்தலைவர் Christina Kirchnerஐ சாந்தா மார்த்தா இல்லத்தில் சந்தித்தல்
19ம் தேதி செவ்வாய் காலை 9.30 மணிக்கு திருத்தந்தையின் பணியேற்பு திருப்பலி நிகழ்த்துதல்
20ம் தேதி புதனன்று பல்வேறு கிறிஸ்தவ சபைகளின் பிரதிநிதிகளையும்,
22ம் தேதி வெள்ளியன்று திருப்பீடத்துக்கான அரசியல் தூதர்களையும் சந்தித்தல்
23ம் தேதி சனிக்கிழமையன்று ஹெலிகாப்டரில் காஸ்தெல் கந்தோல்ஃபோ சென்று முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களைச் சந்தித்தல்
24ம் தேதி ஞாயிறன்று வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் குருத்தோலை ஞாயிறு திருவழிபாட்டை நிகழ்த்துதல்
ஆகியவை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வரும்வார நிகழ்ச்சித் திட்டங்கள் ஆகும்







All the contents on this site are copyrighted ©.