2013-03-16 16:53:33

அர்ஜென்டினா சர்வாதிகாரியோடு புதிய திருத்தந்தைக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை, நொபெல் அமைதி விருதாளர்


மார்ச்,16,2013. அர்ஜென்டினாவில் 1976ம் ஆண்டு முதல் 1983ம் ஆண்டுவரை இடம்பெற்ற இராணுவ சர்வாதிகாரியோடு புதிய திருத்தந்தை பிரான்சிஸ் எவ்விதத் தொடர்பும் கொண்டிருக்கவில்லை என்று, நொபெல் அமைதி விருதைப் பெற்றுள்ளவரும் மனித உரிமை ஆர்வலருமான Adolfo Perez Esquivel கூறினார்.
அர்ஜென்டினாவில் 30 ஆண்டுகளுக்கு மேலாக இடம்பெற்ற கொடுங்கோல் ஆட்சியில் திருத்தந்தை பிரான்சிஸ் குருக்களைக் காப்பாற்றத் தவறிவிட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளதை முன்னிட்டு இவ்வாறு கூறினார் மனித உரிமை ஆர்வலர் Adolfo Perez Esquivel.
மேலும், இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு நம்பத்தகுந்தவை அல்ல என்றும், புதிய திருத்தந்தைமீது இப்போது இக்குற்றச்சாட்டுகளை வைப்பது அர்த்தமற்றது என்றும், அச்சமயத்தில் கர்தினால் ஹோர்ஹோ மாரியோ பெர்ஹோலியோ, கர்தினாலாக உயர்த்தப்படவில்லை, ஆயராகக்கூட இல்லை என்றும், திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி கூறியுள்ளார்.
அர்ஜென்டினா நிருபர் ஒருவரால் முன்வைக்கப்பட்டுள்ள இக்குற்றச்சாட்டு, புதிய திருத்தந்தைக்கு எதிராக அரசியல்ரீதியாக அவரைக் களங்கப்படுத்த முயற்சிக்கும் செயல் என்று, திருப்பீடத்தின் இரண்டாவது பேச்சாளர் அருள்திரு Tom Rosica கூறினார்.







All the contents on this site are copyrighted ©.