மார்ச்,15,2013. நற்செய்தி அறிவிப்புப்பணியை அப்போஸ்தலிக்க ஆர்வத்தோடு செய்ய வேண்டுமென
திருத்தந்தை பிரான்சிஸ் கூறியதாக, திருப்பீட நற்செய்தி அறிவிப்புப்பணிப் பேராயத் தலைவர்
கர்தினால் Fernando Filoni கூறினார். சில நேரங்களில் நாம் களைப்படைந்திருந்தாலும்
எப்போதும் ஆர்வத்தோடும் அன்போடும் நற்செய்தி அறிவிக்க வேண்டும் என்றும், தன்னலத்துக்கு
இடம் கொடுக்கக் கூடாதென்றும் திருத்தந்தை கேட்டுக்கொண்டதாக, கர்தினால் Filoni கூறினார். மேலும்,
திருத்தந்தை பிரான்சிஸ் குறித்து கருத்து தெரிவித்த தென்னாப்ரிக்காவில் மறைப்பணியாற்றும்
ஆயர் José Luis Gerardo Ponce de Leon, திருத்தந்தை பிரான்சிஸ் அந்த முதல் நாளில் மக்களிடம்
தனக்காகச் செபிக்கச் சொன்னதும், அவரது மின்னஞ்சலில் அவ்வாறு கூறியிருப்பதும் அவரது தனிப்பண்பைக்
காட்டுகின்றது என்று தெரிவித்தார்.