மார்ச்,15,2013. நுகர்வோரின் உரிமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஒவ்வோர்
ஆண்டும் மார்ச் 15ம் தேதி, அனைத்துலக நுகர்வோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. நுகர்வோரின்
அடிப்படை உரிமைகளை விளக்குவது; அவற்றின்மீது நடவடிக்கை எடுப்பது; சந்தைக் குற்றங்களுக்கு
எதிராகப் போராடுவது ஆகியவை இத்தினத்தின் முக்கிய நோக்கங்கள் ஆகும். "தற்போது நுகர்வோர்
நீதி' என்ற தலைப்பில் இவ்வாண்டின் இத்தினம் கடைப்பிடிக்கப்பட்டது. நுகர்வோர் என்பவர்
ஒரு பொருளைப் பயன்படுத்துபவர். வாடிக்கையாளர் என்பவர், உற்பத்தியாளரிடம் பொருளை வாங்கி,
அதைப் பயன்படுத்தாமல் மற்றொருவருக்குக் கொடுப்பவர்.