2013-03-14 16:56:31

திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரான்சிஸ் அவர்கள் தலை சிறந்த மனிதர் - கர்தினால் Tagle


மார்ச்,14,2013. பிலிப்பின்ஸ் நாட்டின்மீது தனக்கு அதிக நம்பிக்கை உள்ளதென்றும், பிலிப்பின்ஸ் மக்கள் அன்னை மரியாவிடம் கொண்டுள்ள சிறப்பு பக்தியும், அந்நாட்டுத் திருஅவை ஏழைகளுக்கு ஆற்றும் பணியும் வளர வாழ்த்துவதாகவும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார் என்று கர்தினால் Luis Antonio Tagle கூறினார்.
இப்புதன் மாலை திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரான்சிஸ் அவர்கள் தலை சிறந்த மனிதர் என்று கூறிய கர்தினால் Tagle, கான்கிளேவ் அவை நடைபெற்ற நேரம் முழுமையிலும் மக்கள் அனைவரின் செபங்களால் தாங்கள் சூழப்பட்டிருந்ததை உணர முடிந்தது என்று கூறினார்.
திருஅவையின் பாரம்பரிய கோட்பாடுகளை உறுதியாகக் காக்கும் ஒருவரை, திருஅவையின் தலைவராகப் பெற்றுள்ளது நம்பிக்கை அளிக்கிறது என்று கூறினார் பிலிப்பின்ஸ் ஆயர் பேரவையின் தலைவர் பேராயர் Jose Palma.
விவிலியத்தின் அடிப்படை உண்மைகளை எடுத்துரைக்கும் ஒரு குரலாகவும், நீதி, அமைதி ஆகியவற்றை நிலை நாட்டும் குரலாகவும் திருஅவையின் புதியத் தலைவர் திகழ்வார் என்று தான் எதிர்பார்ப்பதாக பிலிப்பின்ஸ் அரசுத் தலைவர் Benigno Aquino கூறினார்.








All the contents on this site are copyrighted ©.