2013-03-13 19:51:25

இப்புதன் மாலை உரோம் நேரம் 7.05 மணிக்கு திருஅவைக்கு 266வது திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டார்


மார்ச்,13,2013. இப்புதன் மாலை உரோம் நேரம் 7.05 மணிக்கு, இந்தியாவில் இரவு 11.35 மணிக்கு சிஸ்டின் சிற்றாலயத்தின் புகைப் போக்கியிலிருந்து வெள்ளைப் புகை வெளிவர ஆரம்பித்தது. கத்தோலிக்கத் திருஅவைக்கு 266வது திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார்.
புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் கூடியிருந்த பல்லாயிரம் மக்கள் மிகுந்த ஆரவாரத்துடன் வெள்ளைப் புகையை வரவேற்றனர்.
மாலை ஐந்து மணிக்கே இந்த முடிவு தெரியலாம் என்ற எதிர்பார்ப்பில் கூடியிருந்த பல்லாயிரம் மக்கள் தொடர்ந்து பெய்துகொண்டிருந்த மழையையும் பொருட்படுத்தாமல் பசிலிக்கா வளாகத்தில் நின்று புகைப் போக்கியைப் பார்த்தவண்ணம் நின்று கொண்டிருந்தது பார்க்க அழகான காட்சியாக அமைந்தது.
7.05 மணிக்கு வெள்ளைப் புகை வந்ததும், வத்திக்கானைச் சுற்றி அமைந்திருந்த பல்வேறு சாலைகளும் போக்குவரத்திற்கு நிறுத்தப்பட்டது. இருந்தாலும், மக்கள் பல திசைகளிலிருந்தும் பசிலிக்காப் பேராலய வளாகத்தை நோக்கி ஓடிச் சென்றனர்.









All the contents on this site are copyrighted ©.