வாகன ஓட்டுனர்கள், பூ வைப்பவர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என 90 பேர் உறுதிமொழி
மார்ச்,12,2013. கான்கிளேவ் அவைக்குப் பல்வேறு வகைகளில் உதவி செய்யும் வாகன ஓட்டுனர்கள்,
பூ வைப்பவர்கள், திருவழிபாட்டுக்கு உதவுபவர்கள், ஒப்புரவு திருவருள்சாதனத்தைக் கேட்பவர்கள்,
தாதியர், மருத்துவர்கள், உணவு தயாரிப்பவர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என 90 பேர்,
இரகசியம் காப்பது குறித்த உறுதிமொழியை இத்திங்கள் மாலை எடுத்தனர். வத்திக்கானிலுள்ள
சாந்தா மார்த்தா இல்லத்தில் தங்கியிருக்கும் 115 கர்தினால்களுக்கும் பணி செய்யும் இவர்கள்
இத்திங்கள் மாலை 5.30 மணிக்கு Pauline சிற்றாலயத்தில் அளித்த உறுதிமொழி நிகழ்வு, கர்தினால்
தர்ச்சீசியோ பெர்த்தோனே தலைமையில் இடம்பெற்றது.