கர்நாடகாவில் இவ்வாண்டில் ஆறாவது முறையாக கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல்
மார்ச்,11, 2013. கர்நாடகாவின் உடுப்பி அருகே மூடுபெல்லே எனுமிடத்தில் இரவு செபவழிபாட்டிற்கு
ஏற்பாடு செய்துகொண்டிருந்த பெந்தகோஸ்தே கிறிஸ்தவக்குழு ஒன்றின் மீது சில மத தீவிரவாதிகள்
தாக்கியதில் எட்டுபேர் வரை பலத்தக் காயமுற்றுள்ளனர். கிறிஸ்தவப் போதகர் இராபர்ட் லோபோவின்
வீட்டினுள் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பஜ்ரங் தள் அமைப்புகளைச் சார்ந்த ஏறத்தாழ 30 அங்கத்தினர்கள்
நுழைந்து, அங்கு செபிக்கக் கூடியிருந்தவர்களைத் தாக்கியுள்ளனர். தாக்கப்பட்டுள்ளவர்களுள்
எட்டுபேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மதமாற்ற முயற்சிகளில்
ஈடுபட்டனர் என்ற பொய்யானக் குற்றச்சாட்டின்பேரில் கிறிஸ்தவர்கள் மீது நடத்தப்பட்ட இந்தத்
தாக்குதலைத் தொடர்ந்து, 16 மதத் தீவிரவாதிகளை காவல்துறை கைது செய்துள்ளது. கர்நாடக
மாநிலத்தில் 2013ம் ஆண்டின் முதல் இரு மாதங்களில் மட்டும் இதுவரை கிறிஸ்தவர்களுக்கு எதிராக
ஆறு முறை தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.