2013-03-09 15:53:34

தெய்வநிந்தனை சட்டத்தின்கீழ் வழங்கப்படும் மரணதண்டனை இரத்து செய்யப்பட வேண்டும்


மார்ச்,09,2013. தெய்வநிந்தனை சட்டத்தின்கீழ் வழங்கப்படும் மரணதண்டனை இரத்து செய்யப்பட வேண்டும் மற்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டுக்கான பாகிஸ்தான் தூதர் Sherry Rehmanக்கு எதிரான குற்றச்சாட்டுகள் திரும்பப் பெறப்பட வேண்டும் என்ற கையெழுத்து நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது AHRC என்ற ஆசிய மனித உரிமைகள் கழகம்
ஆசிய மனித உரிமைகள் கழகத்தின் இம்முயற்சியில் பாகிஸ்தான் உட்பட ஆசியா மற்றும் உலகெங்கிலுமிருக்கின்ற கழகங்களும் நிறுவனங்களும் விரைவில் இணையவிருக்கின்றன.
தெய்வநிந்தனை சட்டத்தைப் பயன்படுத்துவது, பேச்சு சுதந்திரம் மற்றும் எண்ணச் சுதந்திரத்தைக் க்ட்டுபடுத்துவதாக இருக்கின்றது என்று AHRC கழகம் கூறியுள்ளது.







All the contents on this site are copyrighted ©.