மார்ச்,08,2013. எகிப்திலிருந்து இஸ்ரேலை நோக்கி இலட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் படையெடுக்கத்
தொடங்கியுள்ளன. மொத்தமாக சுமார் 3 கோடி வெட்டுக்கிளிகள்வரை இஸ்ரேலை வந்தடையும் என்றும்,
இவைகள் வந்தால் இஸ்ரேலின் வேளாண்மை பாதிக்கப்படுமெனவும் அஞ்சப்படுகின்றது. இந்நிலையில்
இவற்றைக் கட்டுப்படுத்த இஸ்ரேல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகின்றது. விமானத்தில்
இருந்து மருந்துகளைத் தெளித்து அவற்றைக் கொல்லும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது. பாலைவன வெட்டுக்கிளிகளே இவ்வாறு படையெடுத்துள்ளதாகவும், இவை
இதற்கு முன்னரும் பல ஏக்கர் பயிர் நிலங்களை நாசப்படுத்திய நிகழ்வுகள் வரலாற்றில் பதிவாகியுள்ளதாகவும்
தெரிவிக்கப்படுள்ளது.