2013-03-07 16:13:52

கத்தோலிக்கத் துயர்துடைப்புப் பணிகளுக்கு அமெரிக்க ஐக்கிய நாட்டில் வருகிற ஞாயிறன்று நிதி திரட்டப்படும்


மார்ச்,07,2013. அமெரிக்க ஐக்கிய நாட்டில் வருகிற ஞாயிறன்று கோவில்களில் திரட்டப்படும் நிதி, CRS எனப்படும் கத்தோலிக்கத் துயர்துடைப்புப் பணிகளுக்கு அனுப்பப்படும் என்று அமெரிக்க ஆயர் பேரவை அறிவித்துள்ளது.
"கிறிஸ்து இவர்களில் மறைந்து நிற்கிறார்: நீங்கள் எவ்விதம் உதவப் போகிறீர்கள்?" என்ற தலைப்பில் அமெரிக்க ஆயர் பேரவையின் சார்பில் மடல் ஒன்றை அனுப்பியுள்ளார் Cincinnati பேராயர் Dennis Schnurr.
அமெரிக்க ஆயர்கள் பேரவையின் சார்பில் அண்மையில் இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆயர்கள், அங்கு பலவகையிலும் அடிமைகளாகத் துன்புறுத்தப்படும் 65 இலட்சம் பெண்களை விடுவிக்க CRS நிதி உதவும் என்று இந்த மடலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தவக்காலத்தின் ஓர் அர்த்தமுள்ள முயற்சியாக விளங்கும் இந்தக் காணிக்கையால் உலகின் பல பகுதிகளிலும் துன்புறும் ஒரு கோடிக்கும் மேலானோர் பயன்பெறுவர் என்றும் இந்த விண்ணப்ப மடலில் கூறப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.