2013-03-01 15:52:57

சாம்பியாவில் தேர்தல் வன்முறைகள் குறித்து கிறிஸ்தவத் தலைவர்கள் மிகுந்த கவலை


மார்ச்01,2013. சாம்பியாவில் அண்மையில் நடந்த விறுவிறுப்பான நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரங்களில் இடம்பெற்ற வன்முறைகள் மற்றும் விலைமதிப்பில்லா மனித உயிர்கள் பலியானது குறித்து தாங்கள் மிகுந்த வருத்தம் அடைந்துள்ளதாக, அந்நாட்டின் கிறிஸ்தவத் தலைவர்கள் கூறியுள்ளனர்.
சாம்பியாவின் கிறிஸ்தவ சபைகளின் அவைகள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் வன்முறையில் இத்திங்களன்று அரசியல்வாதி Harrison Chanda கொல்லப்பட்டது உட்பட Livingstoneல் இடம்பெற்ற வன்முறைகள் குறித்த தங்களது கண்டனங்களையும் வெளியிட்டுள்ளன.
இந்த வன்முறைகளில் இறந்த மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்குத் தங்களது அனுதாபங்களைத் தெரிவித்திருப்பதோடு, அனைத்து வகையான அரசியல் வன்முறைகளுக்கு எதிரான, தங்களது வன்மையான கண்டத்தையும் கிறிஸ்தவ சபைகள் வெளியிட்டுள்ளன.







All the contents on this site are copyrighted ©.