2013-02-28 16:20:54

திருத்தந்தை ஆற்றிய பணிக்கென நன்றி சொல்ல கனடா ஆயர்கள் பேரவை ஏற்பாடு செய்துள்ள சிறப்புத் திருப்பலி


பிப்28,2013. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் திருஅவையின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகிச் செல்லும் இவ்வியாழனன்று அவர் ஆற்றிய பணிக்கென நன்றி சொல்ல கனடா ஆயர்கள் பேரவை சிறப்புத் திருப்பலி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.
திருத்தந்தை தன் பணிகளை உரோம் நகர் நேரம் மாலை 8 மணிக்கு நிறைவுசெய்வதால், அதற்கு ஈடான கனடா நாட்டு நேரம் பகல் 12 மணிக்கு Edmonton நகர் புனித யோசேப்பு பேராலயத்தில் கனடா ஆயர்கள் பேரவைத் தலைவரும், Edmonton பேராயருமான Richard Smith தலைமையில் நிகழும் திருப்பலியில் 20 ஆயர்களுக்கும் மேலானோர் கலந்து கொள்வர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தந்தையின் படிப்பினைகள் ஆழமானதாகவும், தெளிவானதாகவும் அமைந்திருந்தன; அப்படிப்பினைகளே திருஅவைக்கு அவர் விட்டுச்செல்லும் முக்கிய கொடைகள் என்று பேராயர் Smith கூறினார்.
கனடாவின் Vancouver, Toronto, Ottawa, Gatineau, Quebec ஆகிய உயர் மறைமாவட்டங்களும் இவ்வியாழனைத் தகுந்த முறையில் கொண்டாடத் திட்டங்கள் தீட்டியுள்ளன.








All the contents on this site are copyrighted ©.