மகாராஷ்டிராவில் வறட்சி பாதிப்பால் 228 விவசாயிகள் தற்கொலை
பிப்.23,2013. இந்த ஆண்டு கடும் வறட்சியை தாக்குபிடிக்க முடியாமல், மகாராஷ்டிராவில் விதர்பா
பகுதியில், 228 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். மகாராஷ்டிராவில், இந்த ஆண்டு கடும்
வறட்சி காரணமாக, விதர்பா மண்டலத்தில், ஆறு மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது,
இங்கு, கடந்த ஆண்டு ஏப்ரல் முதல், ஜனவரி வரை, 228 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்
என மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவரும், மத்திய விவசாயத்துறை அமைச்சருமான சரத்பவார், கூறினார்.
மகாராஷ்டிராவில், 2006ம் ஆண்டு விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை, 1,035 ஆக இருந்த நிலையில்,
விவசாயிகளின் மறுவாழ்விற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக, 2011ம் ஆண்டு, விவசாயிகள்
தற்கொலை, 485 ஆக குறைந்துள்ளது என அமைச்சர் சரத்பவார் மேலும் கூறினார்.