பிப்.23,2013. இச்சனிக்கிழமையன்று தன் ஒருவார தியானத்தை முடித்த திருத்தந்தை, அந்நாளின்
முதல் நிகழ்ச்சியாக இத்தாலிய அரசுத்தலைவர் ஜியார்ஜியோ நப்போலித்தானோவை சந்தித்தார். வருகிற
வியாழனன்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் பணி ஓய்வு பெறவுள்ளதை முன்னிட்டு இச்சனிக்கிழமையன்று
திருப்பீடத்திற்கு வந்து திருத்தந்தையைச் சந்தித்து அரைமணி நேரத்திற்கு மேல் உரையாடிக்கொண்டிருந்த
இத்தாலிய அரசுத்தலைவர், 1840ம் ஆண்டு இத்தாலியில் வெளியிடப்பட்ட பிரபல நாவல் ஒன்றின்
பழங்காலப்பிரதி ஒன்றை திருத்தந்தைக்குப் பரிசாக அளித்தார். வத்திக்கான் பேராலய கட்டுமானப்பணிகளின்
புகைப்பட பிரதி ஒன்றை, இத்தாலிய அரசுத்தலைவருக்குப் பரிசாக அளித்தார் திருத்தந்தை. இரு
தலைவர்களுக்கும் இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின்போது, விரைவில் அரசுப்பயணமாக தான்
ஜெர்மனிக்கு செல்லவிருப்பது குறித்த விவரங்களை திருத்தந்தையிடம் பகிர்ந்துகொண்டார் இத்தாலிய
அரசுத்தலைவர் நப்போலித்தானோ.