இந்தியாவில் பிப்ரவரி 22 திருத்தந்தைக்கென செபிக்கும் நாள்
பிப்.22,2013. தன் தலைமைப் பொறுப்பைத் துறக்கவிருக்கும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்கும்,
புதிதாகத் தேர்ந்தேடுக்கப்படவிருக்கும் திருத்தந்தைக்காகவும் பிப்ரவரி 22, இவ்வெள்ளியன்று
கொண்டாடப்பட்ட புனித பேதுருவின் தலைமைப்பீடத் திருநாளன்று சிறப்பான முறையில் செபிக்கும்படி
இந்திய ஆயர்கள் பேரவையின் தலைவர் கர்தினால் Oswald Gracias வேண்டுகோள் விடுத்துள்ளார். திருத்தந்தையின்
அறிவிப்பு நம்மை அதிர்ச்சியிலும் வருத்தத்திலும் ஆழ்த்தினாலும், அவரது எட்டு ஆண்டுகாலச்
சேவையை இறைவன் ஆசீர்வதிக்குமாறு வேண்டிக்கொள்வது நமது கடமை என்று கர்தினால் Gracias இப்புதனன்று
வெளியிட்ட மடலில் குறிப்பிட்டுள்ளார். "நான் எந்நாளும் உங்களுடன் இருக்கிறேன்" என்று
கூறிய இயேசுவின் வார்த்தைகளில் நம்பிக்கை கொண்டு, இறை ஆவியாரின் தூண்டுதலோடு, கர்தினால்களின்
Conclave சிறப்பு அவை அடுத்தத் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்று செபிக்குமாறு
கர்தினால் Gracias அழைப்பு விடுத்துள்ளார். பிப்ரவரி 22ம் தேதியோ அல்லது மக்களுக்கு
வசதியான ஒரு நாளிலோ அனைவரும் ஒன்று கூடி நற்கருணை ஆண்டவர் முன் செபங்களை எழுப்புமாறு
கர்தினால் Gracias அவர்களின் மடல் அழைப்பு விடுக்கிறது.