Conclaveகர்தினால்கள் அவை பற்றிய திருஅவைச் சட்டங்களில் மாற்றம்
பிப்.21,2013. புதியத் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் Conclave கர்தினால்கள் அவையை
எப்போது துவக்கலாம் என்பதைத் தெளிவுபடுத்தும் வகையில் திருஅவைச் சட்டமாற்றம் ஒன்றை திருத்தந்தை
16ம் பெனடிக்ட் வெளியிடலாம் என்று திருப்பீடப் பேச்சாளர் அருள்தந்தை Federico Lombardi
கூறினார். Conclave எப்போது துவங்கும் என்று பத்திரிக்கையாளர்கள் மீண்டும் மீண்டும்
எழுப்பி வரும் கேள்விக்கு விடையளிக்கும்வண்ணம் இப்புதனன்று பேசிய அருள்தந்தை Lombardi,
கர்தினால்களின் கூட்டத்தைப் பற்றிய திருஅவைச் சட்டங்களில் திருத்தந்தை ஒரு சில மாற்றங்களைச்
செய்வார் என்று எதிர்பார்க்கலாம் என்பதை மட்டும் தெளிவுபடுத்தினார். திருத்தந்தை
இந்த மாற்றங்களை வெளியிடும்போது, Conclave கூடவேண்டிய நாள், இன்னும் Conclave குறித்த
சில கேள்விகள் பற்றிய தெளிவுகள் கிடைக்கும் என்று அருள்தந்தை Lombardi எடுத்துரைத்தார்.