2013-02-20 15:52:32

வியட்நாம் ஆயர்கள் விடுத்துள்ள தவக்காலச் சுற்றறிக்கை


பிப்.20,2013. துவங்கியிருக்கும் தவக்காலத்தில், நுகர்வுக் கலாச்சாரத்திலிருந்தும், மத நம்பிக்கையற்ற வாழ்விலிருந்தும் திரும்பி வருமாறு வியட்நாம் ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
நடைபெறும் நம்பிக்கை ஆண்டை மையமாக்கி ஆயர்கள் விடுத்துள்ள இந்த சுற்றறிக்கையில், தன்னலத்தில் வேரூன்றியுள்ள நுகர்வுக் காலாச்சாரத்திலிருந்து மக்கள் விடுதலை அடையவேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்துள்ளனர்.
அண்மையில் திருத்தந்தை தலைமைப் பொறுப்பிலிருந்து விலகியது கத்தோலிக்க மக்களைப் பெரிதும் பாதித்துள்ளது என்பதைக் குறிப்பிட்ட வியட்நாம் ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Nguyen Van Nhon, திருத்தந்தையிடம் பணிவுப் பாடங்களைப் பயில வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
தவக்காலம் பிறரன்புப் பணிகளை மேற்கொள்வதற்கு ஒரு சிறந்த காலம் என்பதை எடுத்துரைக்கும் ஆயர்களின் மடல், இத்தவக்காலம், உயிர்ப்புத் திருநாளையும், திருஅவையின் புதியத் தலைவரையும் எதிர்நோக்கியிருக்கும் காலம் என்றும் குறிப்பிடுகின்றனர்.








All the contents on this site are copyrighted ©.