நம்பிக்கை ஆண்டில் பாகிஸ்தான் குழந்தைகள் வலிமை மிகுந்த நற்செய்திப் பணியாளர்களாக
விளங்குவர்
பிப்.20,2013. நடைபெற்றுவரும் நம்பிக்கை ஆண்டில் பாகிஸ்தான் குழந்தைகள் வலிமை மிகுந்த
நற்செய்திப் பணியாளர்களாக விளங்குவர் என்று பாகிஸ்தான் அருள் பணியாளர் Francis Nadeem
கூறினார். லாகூரில் உள்ள புனித யோசேப்பு ஆலயத்தில் "மறைபரப்புப்பணி குழந்தைப்பருவ
நாள்" அண்மையில் கொண்டாடப்பட்டபோது, இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த அருள் பணியாளர் Nadeem,
Fides செய்தி நிறுவனத்திடம் இவ்வாறு கூறினார். வசதி வாய்ப்புக்களை இழந்த குழந்தைகளுக்கும்,
மாற்றுத் திறனாளியான குழந்தைகளுக்கும் உதவிகள் செய்வதாக கத்தோலிக்கக் குழந்தைகள் இவ்விழாவின்போது
எடுத்த வாக்குறுதி, நம்பிக்கை ஆண்டில் அவர்கள் ஆற்றக்கூடிய பணிகளுக்கு ஓர் உறுதி மொழிபோல்
அமைந்தது என்று அருள் பணியாளர் Nadeem எடுத்துரைத்தார்.