திருத்தந்தை உரோம் மறைமாவட்டத்தின் மீது கொண்டிருந்த சிறப்பான அன்புக்கு நன்றி தெரிவிக்க
அழைக்கிறேன் - கர்தினால் Agostino Vallini
பிப்.20,2013. திருஅவை மீதும், சிறப்பாக உரோம் மறைமாவட்டத்தின் மீதும் திருத்தந்தை கொண்டிருந்த
சிறப்பான அன்புக்கு நமது நன்றியையும் அன்பையும் தெரிவிக்க உங்களை அழைக்கிறேன் என்று கர்தினால்
Agostino Vallini கூறினார். பிப்ரவரி 27, வருகிற புதனன்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட்
தனது இறுதி புதன் பொது மறைபோதகத்தை புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் நிறைவேற்றுவார்
என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இறுதி மறைபோதகத்தில் உரோம் மறைமாவட்டத்தைச் சேர்ந்த
அனைத்து கத்தோலிக்கர்களும் கலந்துகொள்ளுமாறு திருத்தந்தையின் சார்பாக உரோம் மறைமாவட்டத்தைக்
கண்காணித்து வரும் கர்தினால் Vallini இச்செவ்வாயன்று அழைப்பு விடுத்துள்ளார். திருஅவை
வரலாற்றில் இந்த நிகழ்வு ஒரு தனிப்பட்ட சிறப்பு பெற்றது என்பதை எடுத்துரைத்த கர்தினால்
Vallini, திருஅவைத் தலைமைப்பொறுப்பிலிருந்து விலகிச் செல்லும் 16ம் பெனடிக்ட் அவர்களுக்கும்,
புதியத் திருத்தந்தையின் தேர்வுக்கும் செபிக்கும்படி சிறப்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.