பிப்.16,2013. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தனது பாப்பிறைப் பதவியிலிருந்து விலக இருக்கும்வேளை,
அவருக்காக 40 மணிநேரங்கள் தொடர் செபங்களை நடத்தும் நிக்கராகுவா மக்களுடன் உலகினரும் இணையுமாறு
கேட்டுள்ளனர் அந்நாட்டு ஆயர்கள். தனது பாப்பிறைப் பணியை நிறைவுசெய்யவிருக்கும் திருத்தந்தை
16ம் பெனடிக்ட் மற்றும் தேர்ந்தெடுக்கப்படவிருக்கும் புதிய திருத்தந்தைக்காகத் தூயஆவியிடம்
இச்செப வழிபாடுகளில் விண்ணப்பங்கள் எழுப்பப்படும் என ஆயர்கள் கூறியுள்ளனர். தனது உடல்நிலையை
ஏற்றுக்கொண்டு பதவி விலகும் திருத்தந்தையின் தாழ்ச்சியையும் துணிச்சலையும் வரலாறு என்றும்
நினைவுகூரும் ஒரு திருத்தந்தையாக இவர் இருப்பார் என்றும் நிக்கராகுவா ஆயர்கள் கூறியுள்ளனர்.