2013-02-16 15:20:05

கென்யாவில் அமைதியான வழிகளில் தேர்தல்கள் இடம்பெறுமாறு ஆயர்கள் அழைப்பு


பிப்.16,2013. கென்யாவில் விரைவில் நடைபெறவிருக்கின்ற தேர்தல்கள் அமைதியான வழிகளில் இடம்பெறும் என்பதற்கு அரசியல்வாதிகள் உறுதி வழங்குமாறு கேட்டுள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.
“ஒன்றிணைந்த மற்றும் அமைதியான கென்யா, நான் பார்க்க விரும்பும் மாற்றம்” என்ற விருதுவாக்குடன் தவக்கால நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் கென்ய ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி அவையின் தலைவர் பேராயர் Zacchaeus Okoth, கென்யாவில் தேர்தல்கள் அமைதியாக இடம்பெற வேண்டியது முக்கியம் என்று கூறினார்.
கென்யாவில் 2007ம் ஆண்டு டிசம்பரில் தேர்தலுக்குப் பின்னர் தொடங்கிய வன்முறையில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்ததைக் குறிப்பிட்டுப் பேசிய பேராயர் Okoth, கென்யாவில் இனிமேல் இரத்தம் சிந்துதலே இடம்பெறக் கூடாது என்று கேட்டுக் கொண்டார்.







All the contents on this site are copyrighted ©.