பிப்.16,2013. திருத்தந்தையின் பதவி விலகல் குறித்து கருத்து தெரிவித்த இஸ்ரேல் அரசுத்தலைவர்
Shimon Peres, திருத்தந்தையின் பாப்பிறைப் பணிக்காலச் செயல்கள் மிக முக்கிய தாக்கத்தை
ஏற்படுத்தி இருப்பதாகவும், திருத்தந்தை ஓர் ஆழமான சிந்தனையாளர் என்று கூறியுள்ளார்.
உடல் முதுமையை அடையலாம், ஆனால் ஞானத்திற்கு முதுமையே கிடையாது என்றுரைத்துள்ள இஸ்ரேல்
அரசுத்தலைவர் Shimon Peres, திருத்தந்தை 16ம் பெனடிக்ட், அமைதிக்கும் மனித சமுதாயத்துக்கும்
தன்னை அர்ப்பணித்திருந்தவர் என்று பாராட்டியுள்ளார். உரோமையிலுள்ள பெரிய யூதத் தொழுகைக்கூடத்துக்குத்
திருத்தந்தை சென்றபோது நட்புணர்வையும் ஒருமைப்பாட்டுணர்வையும் தெரிவித்தார் எனவும் கூறிய
இஸ்ரேல் அரசுத்தலைவர், திருத்தந்தை 16ம் பெனடிக்ட், வரலாற்றின் மாற்றங்களை நன்றாகப் புரிந்துகொண்டுள்ள
ஞானமிக்க மனிதர் என்றும் பாராட்டியுள்ளார்