2013-02-15 16:10:28

திருத்தந்தை 16ம் பெனடிக்ட், ருமேனிய அரசுத்தலைவர் சந்திப்பு


பிப்.15,2013. ருமேனிய அரசுத்தலைவர் Traian Basescuஐ இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இச்சந்திப்புக்குப் பின்னர் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே, திருப்பீட நாடுகளுடனான உறவுகளின் செயலர் பேராயர் தொமினிக் மம்பர்த்தி ஆகியோரையும் சந்தித்தார் ருமேனிய அரசுத்தலைவர் Traian Basescu.
ஐரோப்பாவில் பொதுவான விழுமியங்களைப் பாதுகாப்பது உட்பட திருப்பீடத்துக்கும், ருமேனிய நாட்டுக்கும் இடையே நிலவும் நல்லுறவுகள், ருமேனியக் கத்தோலிக்கத் திருஅவைக்கும் அந்நாட்டுக்கும் இடையே, குறிப்பாக, இவ்விரு தரப்புக்கும் இடையே கல்வித்துறையில் ஒத்துழைப்பு போன்ற விடயங்களும், ருமேனியாவில் கத்தோலிக்கச் சமூகங்களைப் பாதிக்கும் விவகாரங்களும் இச்சந்திப்புக்களில் இடம்பெற்றன என்று திருப்பீடப் பத்திரிகை அலுவலகம் அறிவித்தது.
நல்ல இதமான சூழலில் இடம்பெற்ற இச்சந்திப்புக்களில், வெளிநாடுகளில் வாழும் ருமேனியச் சமுதாயத்தை ஒன்றிணைப்பதில் கத்தோலிக்கத் திருஅவையின் பங்கும் நினைவுகூரப்பட்டது.







All the contents on this site are copyrighted ©.