2013-02-15 16:17:15

Pro Petri Sede கழகத்தினருக்குத் திருத்தந்தை நன்றி


பிப்.15,2013. பிறரன்புக்குச் சான்று பகர்வதை இன்னும் ஆழமாக வாழ்வதற்கு நல்ல வாய்ப்பாக நம்பிக்கை ஆண்டு இருக்கின்றது என்று Pro Petri Sede என்ற கழகத்தினரிடம் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
திருப்பீடத்தின் தேவைகளுக்கு நிதி உதவி செய்யும் பெல்ஜியத்தின் Pro Petri Sede என்ற கழகத்தின் 45 பிரதிநிதிகளை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை, விசுவாசமின்றி பிறரன்பு எந்தப் பலனையும் கொடுக்காது என்றும், விசுவாசமும் பிறரன்பும் எப்பொழுதும் ஒன்றிணைந்தே செல்கின்றன என்றும் தெரிவித்தார்.
பொருளாதார அளவில் உதவி செய்வதில் பிறரன்பு முழுமை அடையாது, மாறாக, கிறிஸ்துவின் அன்பில் பங்குகொண்டு பிறரன்பைச் செய்யும்போதுதான் அது முழுமை அடைகின்றது என்றும் கூறிய திருத்தந்தை, Pro Petri Sede கழகம், திருப்பீடத்துக்குச் செய்துவரும் உதவிகளுக்கு நன்றியும் தெரிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.