2013-02-14 16:27:17

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் திருஅவையை ஆழமாக அன்பு செய்தார் - ஹாங்காங் கர்தினால்


பிப்.14,2013. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் திருஅவையை ஆழமாக அன்பு செய்ததால், மேய்ப்புப்பணிக்கு முதலிடம் வழங்கி, தன் முழு இதயத்துடனும், சக்தியுடனும் உழைத்தார் என்று ஹாங்காங் கர்தினால் John Tong கூறினார்.
திருஅவையின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுவதாகத் திருத்தந்தை அறிவித்தததையடுத்து, தன் கருத்துக்களைப் பகிர்ந்த கர்தினால் John Tong, இந்த முடிவை அறிவிப்பதற்கு முந்திய நாள், பிப்ரவரி 10ம் தேதி சீன மக்களுக்கு அவர் புத்தாண்டு வாழ்த்துக்கள் சொன்னதை, சிறப்பாக நினைவு கூர்ந்தார்.
தன் சொல், செயல் என்பவற்றை மட்டும் நம்பியிராமல், செபத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர் திருத்தந்தை என்பதை அவர் எடுத்துள்ள இந்த முடிவு நமக்குக் கூறுகிறது என்றுரைத்த கர்தினால் John Tong, செபத்தின் வல்லமையால், நாம் திருஅவையின் அடுத்தத் தலைவரைத் தேர்ந்தெடுக்க இறைவன் துணைபுரியட்டும் என்றுரைத்தார்.








All the contents on this site are copyrighted ©.