உரோம் குருக்களிடம் திருத்தந்தை : நான் எப்பொழுதும் உங்களுக்கு நெருக்கமாகவே
இருப்பேன்
பிப்.14,2013. திருஅவையின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகியபின்னர், மறைந்ததோர் வாழ்வை
மேற்கொண்டு, செப வாழ்வுக்கு என்னையே அர்ப்பணிக்க இருந்தாலும், நான் எப்பொழுதும் உங்களுக்கு
நெருக்கமாகவே இருப்பேன், நீங்களும் அவ்வாறே இருப்பீர்கள் என நம்புகிறேன் என்றும், அனைவரின்
செபத்திற்கு தான் நன்றி தெரிவிப்பதாகவும், உரோம் மறைமாவட்ட குருக்களிடம் இவ்வியாழனன்று
கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். ஒவ்வோர் ஆண்டும் தவக்காலத்தில் உரோம் மறைமாவட்ட
குருக்களைச் சந்திக்கும், உரோம் மறைமாவட்ட ஆயராகிய திருத்தந்தை, பாப்பிறைப் பணியைவிட்டு
விலகுவதற்கு முன்னர், தனது மறைமாவட்ட குருக்களை மீண்டும் சந்திப்பதற்கு கிடைத்த வாய்ப்பை,
சிறப்பான இறைபராமரிப்புச் செயல் எனக் குறிப்பிட்டார். இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தில்
தான் கலந்து கொண்டது குறித்தும், அப்பொதுச்சங்கத்தின் தாக்கங்கள் குறித்தும் தனது எண்ணங்களைப்
பகிர்ந்துகொண்ட திருத்தந்தை, திருஅவைக்கும் உலகின் சிறந்த சக்திகளுக்கும் இடையே நல்ல
உறவு தொடர்ந்து இடம்பெற வேண்டுமென்ற தனது ஆவலையும் வெளியிட்டார்.