2013-02-13 16:03:54

திருஅவைத் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக திருத்தந்தை அறிவித்ததுபற்றி இயேசு சபை தலைவர்


பிப்.13,2013. "ஏனையோர் செல்ல இயலாத அல்லது செல்லத் தயங்கும் இடங்களுக்கு இயேசு சபையினராகிய நீங்கள் செல்ல வேண்டும் என்பதே உங்களுக்கு விடுக்கப்படும் சவால்" என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் ஐந்தாண்டுகளுக்கு முன் இயேசு சபையினருக்கு அளித்த உரையை இயேசு சபை தலைவர் அருள்தந்தை Adolfo Nicolas நினைவு கூர்ந்தார்.
திருத்தந்தை அவர்கள் திருஅவைத் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக இத்திங்கள் அறிவித்ததைத் தொடர்ந்து, இயேசுசபை அங்கத்தினர்களுக்கு இச்செவ்வாயன்று அனுப்பியுள்ள ஒரு கடிதத்தில், திருத்தந்தை இயேசு சபைமீது கொண்டிருந்த சிறப்பான அன்பை நினைவுகூர்ந்தார்.
இந்த முடிவை திருத்தந்தை எடுப்பதற்கு அவர் கொண்டிருந்த ஆழ்மனச் சுதந்திரத்தையும், திருஅவை மீது அவர் கொண்டிருந்த அன்பையும், அவரது தாழ்ச்சியையும் தான் பாராட்டுவதாகக் கூறினார் இயேசு சபைத் தலைவர் அருள்தந்தை Nicolas.








All the contents on this site are copyrighted ©.