புனித சார்லஸ் பொரோமியோ சபையைச் சேர்ந்த பன்னாட்டு உறுப்பினர்கள் திருத்தந்தையுடன்
சந்திப்பு
பிப்.07,2013. கிறிஸ்துவின் மீது கொண்ட ஆழ்ந்த அன்பினால், புனித சார்லஸ் பொரோமியோ நலிந்தோரைத்
தேடி, அவர்களுக்குத் தன் அன்பையும், சேவையையும் வழங்கியது நமக்கெல்லாம் நல்ல பாடமாக
அமைகிறது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார். புனித சார்லஸ் பொரோமியோ சபையைச்
சேர்ந்த பன்னாட்டு உறுப்பினர்களை இப்புதன் மறைபோதகத்திற்குப் பின் சந்தித்தத் திருத்தந்தை,
அவர்களுடன் வந்திருந்த அச்சபையின் புதியத் தலைவர் அருள்திரு Paolo Sottopietra அவர்களைத்
தனிப்பட்ட முறையில் வாழ்த்தினார். இத்துறவுச் சபையைச் சார்ந்த பலருடன் தனக்குள்ள உறவையும்,
இச்சபை ஆற்றி வரும் பணிகளில் தனக்குள்ள ஆர்வத்தையும் வெளிப்படுத்தி மகிழ்ந்த திருத்தந்தை,
வந்திருந்த அனைவருக்கும் தன் சிறப்பு ஆசீரையும் வழங்கினார்.