பிப்.07,2013. அன்பர்களே, வேளாங்கண்ணி ஆரோக்ய அன்னைத் திருத்தலம் மைனர் பசிலிக்காவாக
உயர்த்தப்பட்டதன் பொன்விழா இம்மாதம் 10ம் தேதி, வருகிற ஞாயிறன்று சிறப்பிக்கப்படவிருக்கின்றது.
நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய இலத்தீன்ரீதி ஆயர்கள் இச்செவ்வாய் முதல் வேளாங்கண்ணியில்
25வது பொதுக் கூட்டத்தை நடத்தி வருகிறார்கள். வேளாங்கண்ணி திருத்தலத்தின் பொன்விழாவையொட்டி
அ.பணி முனைவர் செபஸ்தியான் பெரியண்ணா அவர்களைத் தொலைபேசியில் அழைத்தோம். பெங்களூரு புனித
பேதுரு பாப்பிறைக் குருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றும் இவர், இப்பொன்விழாவுக்கென
செய்தித் தொடர்பாளராக, தஞ்சை ஆயரால் நியமிக்கப்பட்டிருக்கிறார்.