2013-02-07 16:02:01

ஒற்றுமையை வளர்க்கும் அம்சங்களையே வலியுறுத்துவோம் - பாகிஸ்தானின் கிறிஸ்தவ அமைப்புக்கள் அறிவிப்பு


பிப்.07,2013. இறையரசை அறிவிப்பதில் முனைப்புடன் செயல்படுவோம் என்றும், வேற்றுமைகளுக்குப் பதில் ஒற்றுமையை வளர்க்கும் அம்சங்களையே வலியுறுத்துவோம் என்றும் பாகிஸ்தானின் கத்தோலிக்கத் திருஅவையும் இன்னும் பிற கிறிஸ்தவ சபைகளும் அறிவித்துள்ளன.
சனவரி மாத இறுதியில் கொண்டாடப்பட்ட கிறிஸ்துவ ஒன்றிப்பு வாரத்தின் ஒரு விளைவாக, பாகிஸ்தானில் பணிபுரிந்துவரும் கத்தோலிக்கத் திருஅவை, Presbyterian கிறிஸ்தவ சபை, ஆங்கலிக்கன் சபை மற்றும் Salvation Army என்ற நான்கு அமைப்புக்களும் ஒருங்கிணைந்து இவ்வறிக்கையை வெளியிட்டுள்ளன.
கிறிஸ்தவர்கள் வலிமைமிகுந்த ஒரு சமுதாயமாக பாகிஸ்தானில் வாழ ஒற்றுமையே சிறந்த வழி; இதன் மூலமே, கிறிஸ்தவர்களின் வாழ்வும் நாட்டின் அமைதியும் வளர முடியும் என்று பாகிஸ்தான் ஆயர்கள் பேரவையின் பல்சமய உரையாடல் பணிக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் அருள்தந்தை Francis Nadeem கூறினார்.
தற்போது கொண்டாடப்படும் நம்பிக்கை ஆண்டின் ஒரு வெளிப்பாடாகவும், புதிய நற்செய்தி அறிவிப்பின் ஒரு வெளிப்பாடாகவும் கிறிஸ்தவர்களின் ஒற்றுமை பாகிஸ்தானில் வளர வேண்டும் என்று அருள்தந்தை Nadeem வலியுறுத்தினார்.








All the contents on this site are copyrighted ©.