இங்கிலாந்தின் பல்சமயத் தலைவர்கள் மேற்கொள்ளும் Jubilee for Justiceமுயற்சி
பிப்.06,2013. உலகில் நிலவும் ஏழ்மைக்கு ஏழைகளைக் காரணம் காட்டுவது தவறு; இந்த எண்ணத்திலிருந்து
விடுபட்டு, ஏழ்மையை ஒழிக்கும் முயற்சிகளை அனைவரும் இணைந்து மேற்கொள்ளவேண்டும் என்று இங்கிலாந்தின்
பல்சமயத் தலைவர்கள் கூறியுள்ளனர். பிரித்தானியாவிலும், உலகெங்கும் கடன்பட்டிருக்கும்
மக்களின் கடனை இரத்து செய்யவேண்டும் என்று பிரித்தானிய பாராளு மன்றத்தில் நடைபெற்று வரும்
விவாதங்களில் இச்செவ்வாயன்று பல்வேறு சமயத் தலைவர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர். Jubilee
for Justice என்ற தலைப்பில் பல்சமயத் தலைவர்கள் இணைந்து மேற்கொண்டு வரும் முயற்சியின்
ஓர் அங்கமாக, பல்சமயத் தலைவர்கள் இணைந்து அரசுத் தலைவர்களுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
இக்கடிதத்தில் 400க்கும் அதிகமானத் தலைவர்கள் தங்கள் கையொப்பம் இட்டு, ஆதரவைத் தெரிவித்துள்ளனர். வறியோருக்கு
வழங்கப்பட வேண்டிய உரிமைகள் கடவுள் அளித்த பிறரன்பு கட்டளையின் அடிப்படையில் அல்ல, மாறாக,
நீதியின் அடிப்படையில் என்பதை உலக அரசுகள் உணரவேண்டும் என்று இக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.