2013-02-04 15:56:24

இலங்கையின் 30 விழுக்காட்டு சிறார்கள் போதிய சத்துணவின்மையால் பாதிப்பு


பிப்.04,2013. இலங்கையின் 30 விழுக்காட்டு சிறார்கள் போதிய சத்துணவின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சத்துணவு நிபுணர் சங்கம் தெரிவித்துள்ளது.
அன்னையரில் மூன்றில் ஒரு பகுதியினர் இரத்தச் சோகையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சத்துணவு நிபுணர் சங்கத்தின் தலைவர் கலாநிதி ரேனுக டி சில்வா தெரிவித்துள்ளார்.
மக்களின் சத்துணவு நிலைமையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், குறிப்பாக சிறுவர் சிறுமியரின் சத்துணவு நிலைமை குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.







All the contents on this site are copyrighted ©.