சிரியாவில் மெசபத்தோமிய நகரத்தில் ஓர் ஆலயம் அழிக்கப்பட்டுள்ளது, பேராயர் ரோஹம்
பிப்.01,2013. சிரியாவில் சண்டை நடைபெற்றுவரும் முக்கிய நகரமான Deir Ezzorல் சிரியன்
ஆர்த்தடாக்ஸ் சபையின் புனித மரியா ஆலயமும் Al-Wahda கிறிஸ்தவப் பள்ளியும் அழிக்கப்பட்டுள்ளன
என்று சிரியன் ஆர்த்தடாக்ஸ் பேராயர் Eustathius Matta Roham கூறினார். சிரியாவில்
இராணுவத்துக்கும் புரட்சிக்குழுக்களுக்கும் இடையே இடம்பெற்றுவரும் சண்டையில் கிறிஸ்தவ
ஆலயமும், பள்ளியும் அழிக்கப்பட்டிருப்பது அனைவருக்கும் மிகுந்த வருத்தத்தைக் கொடுத்துள்ளது
என்று Fides செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார் பேராயர் Roham. பல ஆண்டுகளாக கடினமாக
உழைத்துக் கட்டிய இந்த இடங்களை மீண்டும் யார் கட்டுவார்கள் என்ற கேள்வியை எழுப்பிய பேராயர்
Roham, சிரியாவில் இடம்பெற்றுவரும் சண்டையில் பாகுபாடின்றி ஒவ்வொருவரும் ஏதாவது ஒன்றை
இழக்கின்றனர் என்றுரைத்தார். சிரியாவில் இராணுவத்துக்கும் புரட்சிக்குழுக்களுக்கும்
இடையே இடம்பெற்றுவரும் சண்டையில் 60 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இறந்துள்ளனர்.